சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடிந்தால் என்ன நிகழும் என்று ஒளிபரப்பினார்கள். மிகவும் வியப்பாக இருந்தது.
ஒளியின் வேகத்தில் பறக்க கூடிய ஒரு விண்கலத்தில் நாம் பயனிப்பதக் கொள்வோம். பூமியிலிருந்து கிளம்பி பால்மா வீதிகளில் சுற்றிவிட்டு 2௦ வாரங்கள் கழித்து மீண்டும் பூமிக்கு திரும்பி வருகிறோம்.பூமியில் மிகப் பெரிய மாற்றங்களை நீங்கள் உணரலாம். உங்கள் உறவினர்களை காண இயலாது,நீங்கள் பார்த்த இடம், பழகின மக்கள் இப்படி எல்லாமே மாறிப்போயிருக்கும். ஏனெனில் ஒளியின் வேகத்தில் நீங்கள் பயணித்த இரண்டு வாரப் பயணமானது பூமியில் 250 வருடங்களாகியிருக்கும். ஒளியின் வேகத்தில் நீங்கள் பயணிக்கும்பொழுது காலமே மெதுவாகத்தான் நகருமாம்.
இந்தியப் புராணங்களிலும், இதிகாசங்களிலும் காலத்தை கடந்த மனிதர்கள் என்று பலபேரை குறிப்பிடுவதுண்டு. தமிழ் சமூகத்தில் காலத்தை வென்றவர்கள் என்று சித்தர்களை கூறுவதுண்டு. என் கல்லூரி நாட்களில் மேற்கு தொடர்ச்சி மழைக் காடுகளில் இருநூறு வருடங்களை கடந்த சித்தர்களை கண்டதாக ஊர் மக்கள் சொல்லியதாக என் நண்பர்கள் கூறுவதுண்டு. ஆனால் இவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியே.
முதலில் ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடியுமா? அறிவியல் என்ன சொல்கிறது..
ஐன்ஸ்டீன் விதிப்படி "ஒளியின் வேகத்தில் பயணிக்கத் தொடங்கும்போது காலமே மெதுவாக நகரகத் தொடங்கும். பொருளின் நிறை மேலும் கூடியும், அதன் அடர்த்தி அதிகமாகியும் பொருள் அதற்குமேல் பயணிக்க முடியாததாகி விடும்"
ஆனால் எலக்ட்ரான் வெற்றிடம் அல்லாத வேறு ஒரு ஊடகத்தின் வழியே, ஒளியின் வேகத்தில் எந்தவொரு சேதாரமும் இன்றி பயணிக்க முடியும் என்கிறார்கள் சில அறிஞர்கள். எலக்ட்ரானுக்கு நிறை உண்டு.
வானூர்தி கண்டுபிடிப்பதற்கு முன்பு "காற்றை விட கனமானது எதுவும் பறக்க முடியாது" என்ற அறிவியல் கோட்பாடு இருந்தது. அதை உடைத்துதான் மனிதன் பறந்தான்.
அதற்கடுத்து ஒலியின்(சப்தத்தின்) வேகத்தை விட எந்தவொரு பொருளும் பறக்க முடியாது என்றார்கள்.ஆனால் இப்பொழுது ஒலியை விட வேகத்தில் பறக்க கூடிய விமானங்களும்(சூப்பர்சோனிக் விமானங்கள்), மணிக்கு எழுபத்திரெண்டாயிரம் கி.மீ வேகத்தில் பறக்க கூடிய ராக்கெட்டுகளும் வந்துவிட்டன.ஆனாலும் ஒளியின் வேகத்தில் பறக்க கூடிய ராக்கெட்டுகளுக்கு எரிபொருள் தேவை என்பது ஒரு பெரிய தடையே. யார் கண்டது வரும் தலைமுறை அணுப்பிளவினாலோ / இணைப்பினாலோ கிடைக்க கூடிய மாபெரும் சக்தியை வைத்து பறக்க கூடிய ராக்கெட்டுகளை கண்டுபிடிக்கலாம்.
ஆக இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் மனிதன் ஒளியின் வேகத்தில் பயணிக்க முடியும். அன்று அவனுடைய சராசரி வயது பல ஆயிர வருடங்களை கொண்டிருக்கும்.
Monday, January 17, 2011
Wednesday, January 12, 2011
பொங்கல் வாழ்த்துகள் !!
காடு வளர்த்து கழனி திருத்தி
அணை எடுத்து புனல் தேக்கி
உழவு செய்து களை நீக்கி
பயிர் நடுத்து மானுடத்தின் பசிபோக்கி
கலை வளர்த்து கொடை கொடுத்து
அச்சம் தவிர்த்து வீரம் வார்த்து
இயற்கை துதித்து கால்நடை போற்றி
சுற்றம் அழைத்து சுகித்திருக்கும் ஓரினம் - அது
உலகத்தின் தொன்மையினம் தமிழராம்
அவர்தம் மொழி தமிழாம்
அவர்போற்றும் பண்டிகை பொங்கலாம்!!
பொங்கல் பண்டிகை என்பது திருவிழா என்பதையும் மீறி தமிழர்கள் என்ற இனத்தையும், அந்த இனப் பேசும் தொன்மையான மொழியையும், அவர்களது பண்பாட்டு விழுமியங்களையும் உலகிற்கு உணர்த்தும் நன்நாள்.தமிழர்களின் சுய அடையாளத்தை உணர்த்தும் பொன்நாள்.அந்நாளை மகிழ்வுடன் நினைவு கூறுங்கள்!!
தோழர்கள் அனைவருக்குன் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!
அணை எடுத்து புனல் தேக்கி
உழவு செய்து களை நீக்கி
பயிர் நடுத்து மானுடத்தின் பசிபோக்கி
கலை வளர்த்து கொடை கொடுத்து
அச்சம் தவிர்த்து வீரம் வார்த்து
இயற்கை துதித்து கால்நடை போற்றி
சுற்றம் அழைத்து சுகித்திருக்கும் ஓரினம் - அது
உலகத்தின் தொன்மையினம் தமிழராம்
அவர்தம் மொழி தமிழாம்
அவர்போற்றும் பண்டிகை பொங்கலாம்!!
பொங்கல் பண்டிகை என்பது திருவிழா என்பதையும் மீறி தமிழர்கள் என்ற இனத்தையும், அந்த இனப் பேசும் தொன்மையான மொழியையும், அவர்களது பண்பாட்டு விழுமியங்களையும் உலகிற்கு உணர்த்தும் நன்நாள்.தமிழர்களின் சுய அடையாளத்தை உணர்த்தும் பொன்நாள்.அந்நாளை மகிழ்வுடன் நினைவு கூறுங்கள்!!
தோழர்கள் அனைவருக்குன் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!
Monday, January 3, 2011
கற்பென்பதும் களவேன்பதும் யாதெனில்....
இன்று நமதெனப்படுவது நேற்று நமதில்லை
நேற்று நமதெனப்பட்டது இன்று நமதில்லை
குழப்பமாக உள்ளதா? முன்பு கோவில்களில் தமிழர்களால் ஆடப்பட்ட தேவரடியாள் ஆட்டம் எனபது இன்று பரதநாட்டியம் என்ற பெயரில் ஆடப்பட்டு தமிழர்களுக்கு அன்னியமாகிப்போனது(இதுபோல கர்நாடக இசை, தற்காப்பு கலை இன்னும் நிறைய சொல்லலாம்).அதுபோல நாம்
நேற்று நமதெனப்பட்டது இன்று நமதில்லை
குழப்பமாக உள்ளதா? முன்பு கோவில்களில் தமிழர்களால் ஆடப்பட்ட தேவரடியாள் ஆட்டம் எனபது இன்று பரதநாட்டியம் என்ற பெயரில் ஆடப்பட்டு தமிழர்களுக்கு அன்னியமாகிப்போனது(இதுபோல கர்நாடக இசை, தற்காப்பு கலை இன்னும் நிறைய சொல்லலாம்).அதுபோல நாம்
கற்பு பற்றி கொண்டிருக்கும் வரையறையானது நமதில்லை எனபதும் தெளிவு.
"கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன், கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” (தொல்காப்பியம் கற்பியல் 140)
கரண் - உடம்பு
கொளற்குரி - பெறுவதற்குரிய
கிழவன் - உரியவன்;தலைவன்
கொடைக்குரி - கொடுத்தற்குரிய
கிழத்தி - உரியவள்;தலைவி
கொளற்குரி மரபிற் கிழவன், கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” (தொல்காப்பியம் கற்பியல் 140)
கரண் - உடம்பு
கொளற்குரி - பெறுவதற்குரிய
கிழவன் - உரியவன்;தலைவன்
கொடைக்குரி - கொடுத்தற்குரிய
கிழத்தி - உரியவள்;தலைவி
கற்பெனப்படுவது உடம்போடு புணரக், ஆணைப் பெற்றோர் பெண்ணைக் கொள்வதும், பெண்ணைப் பெற்றோர் பெண்ணைக் கொடுப்பதுமாகும்.
கற்பு என்பதை பின்வருமாறும் கூறுவர்...
கற்பு என்ற சொல்லுக்குக் கற்றதைப் பின்பற்று என்று பொருள். அதாவது பெரியோர்கள் கற்பித்தபடி இல்லறம் நடத்தலே கற்பு எனவும் அவற்றை மீறும் தலை மக்கள் கற்பிழந்தவர்களாகவும் கருதப் பெறுவர்.
ஆக கற்பு என்பதற்கும் கன்னித்தன்மை இழத்தல் என்பதற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. மேலும் கற்பு என்ற சொல் பெண்ணுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. அது ஆண் பெண் இருவருக்கும் உரித்தான ஒரு சொல்.
களவு:
"காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்
பாங்கோடு தழாலும் தோழியிற் புணர்வுமென்று
ஆங்கநால் வகையினும் அடைந்த சார்போடு
மறையென மொழிதல் மறையோர் ஆறே"
பாங்கோடு தழாலும் தோழியிற் புணர்வுமென்று
ஆங்கநால் வகையினும் அடைந்த சார்போடு
மறையென மொழிதல் மறையோர் ஆறே"
காமப் புணர்ச்சியும் - மனம் ஒத்த இருவர் தாமே கூடி புணர்வது(பெற்றோர்கள் சம்மதமின்றி).இதை இயற்கைப் புணர்ச்சி எனவும் கூறுவர்.
இடந்தலைப் படலும் - இயற்கைப் புணர்ச்சி கொண்ட தலைவன் தலைவி மீண்டும் அவ்விடத்தே சென்று கூடுதல்
பாங்கோடு தழாலும் - (பாங்கன்:தோழன்) தோழனை தலைவியிடம் தூது அனுப்பி அவளை குறியிடத்தே வரச் சொல்லி கூடுதல்
தோழியிற் புணர்வுமென்று - தலைவியின் தோழி வழியே தூது அனுப்பி அவளை குறியிடத்தே வரச் சொல்லி கூடுதல்
..ஆக களவை நான்கு வகைபடுத்துகின்றனர்
"உளமலி காதல் களவு எனப்படுவது
ஒரு நான்கு வேதத்து இருநான்கு மன்றலுள்
யாழோர் கூட்டத்தின் இயல்பினது என்ப" (களவியல் நூற்பா -1)
ஒரு நான்கு வேதத்து இருநான்கு மன்றலுள்
யாழோர் கூட்டத்தின் இயல்பினது என்ப" (களவியல் நூற்பா -1)
கொடுப்போரும், பெறுவோரும் இன்றித் தலைமகனும், தலைமகளும் தனி இடத்தில் எதிர்ப்பட்டுத் தாமே கூடி இன்புறுவது. இதுவே யாழோர் கூட்டம் எனப்படும்.
ஞானக்கூத்தன் களவு பற்றி இவ்வாறு கூறுகிறார்
"நட்புக்குரிய பருவத்தில் இருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது தமக்குள் ஒரு பிணைப்புணர்வு ஏற்பட்டு மீண்டும் சந்திக்க விரும்பிச் சந்தித்துப் பழகுவது 'களவு' எனப்படுகிறது. இந்தச் சந்திப்பும் பழக்கமும் இரண்டு வீட்டார்களுக்கும் தெரியாமலேயே நடப்பதால் வீட்டார் பார்வையில் 'களவு' என்று கருதப்பட்டிருக்கிறது. களவு என்றே பெயரும் பெற்றுள்ளது"
Tuesday, December 28, 2010
வாழ்க்கைப் போராட்டத்தில் வெல்வது வன்மையா?? மென்மையா??
சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாங்குடி மருதனார் என்ற சங்க காலப் புலவர் புறநானுற்று பாடல் ஒன்றில் இவ்வாறு கூறுகிறார்
"துடியன் பாணன் பறையன் கடம்பன்
இந்நான்கல்லது குடியுமிலவே”
துடியன் - துடி என்னும் தோல் கருவியை இசைக்கும் குடியினர்
பாணர் - சங்க காலத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கலைகளையும் செய்யவல்ல மற்றும் அவற்றையே தொழிலாக கொண்ட ஒரு குடியினர்
பறையன் - கிளர்ந்தெழும் உடல் அசைவுகளை உருவாக்கும் இசையை இசைக்கும் மற்றும் பறை மூலம் தகவல் சொல்லும் ஒரு குடியினர்
கடம்பன் - கடம்பு மரத்தைச் சின்னமாகக் கொண்ட அரச குடியினர்
துடியன்,பாணன்,பறையன் மற்றும் கடம்பன் என்ற நான்கு குடிகளும் உயர்ந்த குடிகள் என்கிறார். ஆனால் இன்று இக்குடிகளுள் பறையர் என்ற குடியைத் தவிர மற்ற குடிகள் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. அதுவும் இன்று தாழ்ந்த குடிகளாக பறையர்கள் கருதப்படுகிறார்கள்.
மற்றைய மூன்று குடிகளும் முற்றிலும் அழிந்து போனார்களா? அல்லது அழிக்கப்பட்டர்களா ? அல்லது வேறு குடிகளாக திரிந்து போனார்களா? அப்படியே திரிந்து போனாலும் அதற்க்கான தெளிவான வரலாற்று எச்சங்கள் எதுவுமில்லையே? இவை மட்டுமின்றி நாகர், வேளிர், மாயர், இயக்கர்...இன்னும் பிற குடிகளைப் பற்றியும் சங்க இலக்கியத்தில் குறிப்புகள் காணப்படுகின்றது.இவர்கள் என்ன ஆனார்கள்? ஈராயிரம் ஆண்டுகளுக்குள் எவ்வளவு மாற்றம்?
ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னும் ஆரியர்கள் பெருத்த மாற்றமின்றி இன்று வரையிலும் தனித்துவத்தை பேணுவது எப்படி? பார்ப்பனர்கள் போர் புரிந்தார்கள் என்று எங்குமில்லையே?
வாழ்க்கைப் போராட்டத்தில் வெல்வது வன்மை குணம் கொண்ட குடிகளா??? மென்மை குணம் கொண்ட குடிகளா??? இங்கும் "தகுதியானவை தப்பிப் பிழைக்கும்" என்கிற டார்வின் கோட்பாடு செல்லுமோ??!!
"துடியன் பாணன் பறையன் கடம்பன்
இந்நான்கல்லது குடியுமிலவே”
துடியன் - துடி என்னும் தோல் கருவியை இசைக்கும் குடியினர்
பாணர் - சங்க காலத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கலைகளையும் செய்யவல்ல மற்றும் அவற்றையே தொழிலாக கொண்ட ஒரு குடியினர்
பறையன் - கிளர்ந்தெழும் உடல் அசைவுகளை உருவாக்கும் இசையை இசைக்கும் மற்றும் பறை மூலம் தகவல் சொல்லும் ஒரு குடியினர்
கடம்பன் - கடம்பு மரத்தைச் சின்னமாகக் கொண்ட அரச குடியினர்
துடியன்,பாணன்,பறையன் மற்றும் கடம்பன் என்ற நான்கு குடிகளும் உயர்ந்த குடிகள் என்கிறார். ஆனால் இன்று இக்குடிகளுள் பறையர் என்ற குடியைத் தவிர மற்ற குடிகள் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. அதுவும் இன்று தாழ்ந்த குடிகளாக பறையர்கள் கருதப்படுகிறார்கள்.
மற்றைய மூன்று குடிகளும் முற்றிலும் அழிந்து போனார்களா? அல்லது அழிக்கப்பட்டர்களா ? அல்லது வேறு குடிகளாக திரிந்து போனார்களா? அப்படியே திரிந்து போனாலும் அதற்க்கான தெளிவான வரலாற்று எச்சங்கள் எதுவுமில்லையே? இவை மட்டுமின்றி நாகர், வேளிர், மாயர், இயக்கர்...இன்னும் பிற குடிகளைப் பற்றியும் சங்க இலக்கியத்தில் குறிப்புகள் காணப்படுகின்றது.இவர்கள் என்ன ஆனார்கள்? ஈராயிரம் ஆண்டுகளுக்குள் எவ்வளவு மாற்றம்?
ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னும் ஆரியர்கள் பெருத்த மாற்றமின்றி இன்று வரையிலும் தனித்துவத்தை பேணுவது எப்படி? பார்ப்பனர்கள் போர் புரிந்தார்கள் என்று எங்குமில்லையே?
வாழ்க்கைப் போராட்டத்தில் வெல்வது வன்மை குணம் கொண்ட குடிகளா??? மென்மை குணம் கொண்ட குடிகளா??? இங்கும் "தகுதியானவை தப்பிப் பிழைக்கும்" என்கிற டார்வின் கோட்பாடு செல்லுமோ??!!
Friday, November 26, 2010
கடை திறமினோ
"இத்துயில் மெய்த்துயிலே என்றுகுறித்து இளைஞோர்
இது புலவிக்கு மருந்தென மனம்வைத்து அடியில்
கைத்தலம் வைத்தலுமே பொய்த்துயில் கூர்நயனக்
கடைதிறவா மடவீர் கடைதிற மின்திறன்"
துயில் - தூக்கம்
கடைகள் திறமினோ - கதவுகளைத் திறவுங்கள்
புலவி - ஊடல் - காதலில் செய்யும் பொய்க்கோபம்
கூர்நயனக் - பொய் உறக்கம் கொள்கின்ற கண்
தலைவன் கலிங்கத்துப் போரில் கலந்து திரும்பி வீடு வர காலம் தாழ்த்ததினால் தலைவி கோபம் கொண்டு அவனோடு ஊடல் கொள்கிறாள். தலைவன் அவள் ஊடல் நீக்க வழி தெரியாமல் தவித்து மதி மயங்கும் மாலை நேரத்தில் வீடு செல்கிறான். அப்பொழுது தலைவி தூங்கி கொண்டிருப்பது போல் நடிக்கிறாள். தலைவி துயில் கொள்கிறாள் அவள் ஊடல் நீக்க இதுதான் சரியான தருணம் என நினைத்து அவள் மெல்லிய பாதங்களை வலி நீங்குமாறு பற்றுகிறான்.காலைப் பிடித்தாயிற்று இனி என்ன கூடல் தானே? தலைவியும் மனமிரங்கி ஊடல் நீங்கி தலைவனுடன் கூடல் கொண்டால் என்பது பொருள்.
இந்த பாட்டில் அப்படி என்ன வில்லங்கம் இருக்குனு கேக்குறீங்க?
//இது புலவிக்கு மருந்தென மனம் வைத்தடியிற் கைத்தலம் வைத்தலுமே//
அடியில் கைத்தலம் வைத்தலுமே - இதற்க்கு வேறு அர்த்தமும் உண்டு
இது புலவிக்கு மருந்தென மனம்வைத்து அடியில்
கைத்தலம் வைத்தலுமே பொய்த்துயில் கூர்நயனக்
கடைதிறவா மடவீர் கடைதிற மின்திறன்"
துயில் - தூக்கம்
கடைகள் திறமினோ - கதவுகளைத் திறவுங்கள்
புலவி - ஊடல் - காதலில் செய்யும் பொய்க்கோபம்
கூர்நயனக் - பொய் உறக்கம் கொள்கின்ற கண்
தலைவன் கலிங்கத்துப் போரில் கலந்து திரும்பி வீடு வர காலம் தாழ்த்ததினால் தலைவி கோபம் கொண்டு அவனோடு ஊடல் கொள்கிறாள். தலைவன் அவள் ஊடல் நீக்க வழி தெரியாமல் தவித்து மதி மயங்கும் மாலை நேரத்தில் வீடு செல்கிறான். அப்பொழுது தலைவி தூங்கி கொண்டிருப்பது போல் நடிக்கிறாள். தலைவி துயில் கொள்கிறாள் அவள் ஊடல் நீக்க இதுதான் சரியான தருணம் என நினைத்து அவள் மெல்லிய பாதங்களை வலி நீங்குமாறு பற்றுகிறான்.காலைப் பிடித்தாயிற்று இனி என்ன கூடல் தானே? தலைவியும் மனமிரங்கி ஊடல் நீங்கி தலைவனுடன் கூடல் கொண்டால் என்பது பொருள்.
இந்த பாட்டில் அப்படி என்ன வில்லங்கம் இருக்குனு கேக்குறீங்க?
//இது புலவிக்கு மருந்தென மனம் வைத்தடியிற் கைத்தலம் வைத்தலுமே//
அடியில் கைத்தலம் வைத்தலுமே - இதற்க்கு வேறு அர்த்தமும் உண்டு
-------------------------------------------------------------------------------------------------------------------
"சுரிகுழல் அசைவுற அசைவுறத்
துயிலெழும் மயிலென மயிலெனப்
பரிபுர ஒலியெழ ஒலியெழப்
பனிமொழி யவர்கடை திறமினோ"
சுரிகுழல் - நெளிந்த கூந்தல்
பரிபுர - சிலம்புகள் அணிந்த நிர்த்த பதம் வைத்து நடனஞ் செய்கின்ற
பனிமொழி - குளிர்ந்த மொழி - இனிய மொழி
நீண்ட நெடிய நெளிந்த கூந்தல் அசைவுற, தூக்கம் கலைந்து எழும் அழகிய மயில் போல சிலம்புகள் அணிந்த மெல்லிய பாதத்தில் சின்ன அடி வைத்து நடனஞ் செய்கின்ற போது எழும் ஒலியைப் போல குரலைக் கொண்ட இனிய மொழியை பேசுபவளே கதவை திறவாயா?? கலிங்கத்துப் பரணி புகழ் கேட்க...
கூந்தல் அசைவதும்,சிலம்பொலி எழுவதும்,இனிய மொழி பேசுவதும் கலவிப் போர் புரியுங்கால் மகளிரின் இயல்பாக கூறப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------
"சொருகு கொந்தளகம் ஒருகைமேல் அலைய
ஒருகை கீழ் அலைசெய் துகிலொடே
திரு அனந்தலினும் முகம் மலர்ந்துவரு
தெரிவை மீர்கடைகள் திறமினோ"
ஓர் அழகிய காலை நேரம் வஞ்சி ஒருத்தி மஞ்சத்திலிருந்து துயில் எழுகிறாள். அவள் தூங்கும்பொழுது சுருண்டு நெளிந்த கூந்தல் அவிழ்ந்து, வெண்ணிற உடலோடு கூடிய ஆடை கலைந்து கிடக்கிறது. எழுந்தவள் ஒரு கையால் அவிழ்ந்து நின்ற கூந்தலைத் தாங்கினாள், மற்றொரு கையால் நெகிழ்ந்து நின்ற ஆடையை பற்றினாள். அப்படியே இரண்டடி எடுத்து வைக்கிறாள்.. அக்காலை நேரத்திலும் அவள் முகம் நிலவென் மலர்ந்து நிற்கிறது...உறக்கத்திலும் கூட அவள் முகமலர்ச்சி....
இவைதான் சொற்களின் ஓவியமோ!!!
"சுரிகுழல் அசைவுற அசைவுறத்
துயிலெழும் மயிலென மயிலெனப்
பரிபுர ஒலியெழ ஒலியெழப்
பனிமொழி யவர்கடை திறமினோ"
சுரிகுழல் - நெளிந்த கூந்தல்
பரிபுர - சிலம்புகள் அணிந்த நிர்த்த பதம் வைத்து நடனஞ் செய்கின்ற
பனிமொழி - குளிர்ந்த மொழி - இனிய மொழி
நீண்ட நெடிய நெளிந்த கூந்தல் அசைவுற, தூக்கம் கலைந்து எழும் அழகிய மயில் போல சிலம்புகள் அணிந்த மெல்லிய பாதத்தில் சின்ன அடி வைத்து நடனஞ் செய்கின்ற போது எழும் ஒலியைப் போல குரலைக் கொண்ட இனிய மொழியை பேசுபவளே கதவை திறவாயா?? கலிங்கத்துப் பரணி புகழ் கேட்க...
கூந்தல் அசைவதும்,சிலம்பொலி எழுவதும்,இனிய மொழி பேசுவதும் கலவிப் போர் புரியுங்கால் மகளிரின் இயல்பாக கூறப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------
"சொருகு கொந்தளகம் ஒருகைமேல் அலைய
ஒருகை கீழ் அலைசெய் துகிலொடே
திரு அனந்தலினும் முகம் மலர்ந்துவரு
தெரிவை மீர்கடைகள் திறமினோ"
ஓர் அழகிய காலை நேரம் வஞ்சி ஒருத்தி மஞ்சத்திலிருந்து துயில் எழுகிறாள். அவள் தூங்கும்பொழுது சுருண்டு நெளிந்த கூந்தல் அவிழ்ந்து, வெண்ணிற உடலோடு கூடிய ஆடை கலைந்து கிடக்கிறது. எழுந்தவள் ஒரு கையால் அவிழ்ந்து நின்ற கூந்தலைத் தாங்கினாள், மற்றொரு கையால் நெகிழ்ந்து நின்ற ஆடையை பற்றினாள். அப்படியே இரண்டடி எடுத்து வைக்கிறாள்.. அக்காலை நேரத்திலும் அவள் முகம் நிலவென் மலர்ந்து நிற்கிறது...உறக்கத்திலும் கூட அவள் முகமலர்ச்சி....
இவைதான் சொற்களின் ஓவியமோ!!!
Tuesday, October 19, 2010
உயிர் கொல்கிறாய் !!
காதல்மொழி பேசாமல்
கரம் தீண்டாமல்
இடை தழுவாமல்
இதழ் பருகாமல்
கண்ணாலே கள்வெறி ஏத்தி
செவ்வரி விழிவழியே
உடல்புகுந்து உயிர்கொல்கிறாய் !!
கரம் தீண்டாமல்
இடை தழுவாமல்
இதழ் பருகாமல்
கண்ணாலே கள்வெறி ஏத்தி
செவ்வரி விழிவழியே
உடல்புகுந்து உயிர்கொல்கிறாய் !!
கலிங்கத்துப் பரணி - நக்காஞ்சிக்கும் வடமலைக்கும்
கலிங்கத்துப் பரணியில் மற்றுமொரு சுவைமிக்கபாடல்
“நக்காஞ்சிக்கும் வடமலைக்கும்
நடுவில் வெளிக்கே வேடனைவிட்டு
அக்கானகத்தே உயிர்பறிப்பீர்”
காஞ்சிக்கும்(பழமையான தமிழ் நகரம்) வடமலைக்கும்(இமயமலைக்கும்) நடுவே வேடனை விட்டு, அக்காட்டிலே அவனது உயிரை பறிப்பீராக(கொல்லுவீராக). இது வெளிப்படையான் அர்த்தம்.
இதில் மறைந்திருக்கும் பொருள் என்னவெனில்,"நல்லஅணிகலன் மற்றும் மாலை அணிந்தகொங்கைகளுக்கும் நடுவே இல்லாத இடமாகிய இடுப்பில் மன்மதனை விட்டு, மணம் பொருந்தியமலை போன்ற கொங்கைகளால் அவனைக் இன்பத்தில் தோய்த்து எடுப்பீராக(கொல்லுவீராக)"
நக்காஞ்சி- மகளிர் இடையில் உடுத்தும் ஒருவகை ஆபரணம்
வடமலை - மாலை அணிந்தகொங்கைகள்(மார்புகள்)
நடுவில் - நடுவுஇல் - நடுஇடம் அல்லாத
வெளி - இடுப்பு
வேடனை - வேள்தனை - மன்மதனை
அக்கானகத்தே - கான்நகத்து - மணம் பொருந்தியமலை போன்ற கொங்கைகளால்
“நக்காஞ்சிக்கும் வடமலைக்கும்
நடுவில் வெளிக்கே வேடனைவிட்டு
அக்கானகத்தே உயிர்பறிப்பீர்”
காஞ்சிக்கும்(பழமையான தமிழ் நகரம்) வடமலைக்கும்(இமயமலைக்கும்) நடுவே வேடனை விட்டு, அக்காட்டிலே அவனது உயிரை பறிப்பீராக(கொல்லுவீராக). இது வெளிப்படையான் அர்த்தம்.
இதில் மறைந்திருக்கும் பொருள் என்னவெனில்,"நல்லஅணிகலன் மற்றும் மாலை அணிந்தகொங்கைகளுக்கும் நடுவே இல்லாத இடமாகிய இடுப்பில் மன்மதனை விட்டு, மணம் பொருந்தியமலை போன்ற கொங்கைகளால் அவனைக் இன்பத்தில் தோய்த்து எடுப்பீராக(கொல்லுவீராக)"
நக்காஞ்சி- மகளிர் இடையில் உடுத்தும் ஒருவகை ஆபரணம்
வடமலை - மாலை அணிந்தகொங்கைகள்(மார்புகள்)
நடுவில் - நடுவுஇல் - நடுஇடம் அல்லாத
வெளி - இடுப்பு
வேடனை - வேள்தனை - மன்மதனை
அக்கானகத்தே - கான்நகத்து - மணம் பொருந்தியமலை போன்ற கொங்கைகளால்
Subscribe to:
Posts (Atom)