Showing posts with label பயிர்ப்பு. Show all posts
Showing posts with label பயிர்ப்பு. Show all posts

Tuesday, July 8, 2008

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு

ஒரு வலைப்பதிவில் கண்டதை தொகுத்து தந்திருக்கிறேன் ..... ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும்,பயந்துகொண்டே இருக்க வேண்டும் என்றும், முட்டாளாகத் திரிய வேண்டும் என்று நம் முன்னோர்கள் நினைத்து இதை சொன்னார்கள் என்று எண்ணுவது தவறு. 

கணவன், மனைவி இரண்டு பேர் தனிமையில் இருக்கும் போது(சயனக் கிருகம்) வேண்டிய குணம் அது நாலும். சரியாச் சொல்லப் போனால் முதல் மூணும் 

பொய் அச்சம்  

பொய் நாணம் 

பொய் மடம். 

அச்சம்  

அச்சமில்லாமல் அச்சப்படுவது போல் நடிப்பது.  

சமையலறையில் கரப்பான் பூச்சியைப் பார்த்தால் துடைப்பக் கட்டையைத் திருப்பிக்கொண்டு நாலு போடு போடும் அதே பெண், சயன அறையில் அதே கரப்பான் பூச்சியைப் பார்த்தால் 'ஐயோ! கரப்பூ பா... எனக்கு கரப்புன்னா ரொம்ப ரொம்ப பயம்' என்று கணவனின் பின்னால் ஓளிவது 

மடம்  

தெரிந்திருந்தாலும் தெரியாததைப் போல பண்ணும் பாவனை.  

அலுவலில் லாஜிக் தப்பா சொன்னா தலையில் குட்டும் அதே பெண், சயன அறையில் கணவன் சொல்லும் லாஜிக் மாதிரி பெஸ்ட் எதுவும் இல்லை என்கிற மாதிரி பாவ்லா பன்னுவது. 

நாணம்  

சொல்ல வந்ததை சூசகமாக(சிறிது வெட்கத்துடன்) சொல்லும் இடம்.  

பயிர்ப்பு  

தன் கணவன் அல்லாத ஓர் ஆடவன் தன்னைத் தொடும்போது (தொடுகையே நோக்கம் சொல்லும். நோக்கம் வேறு மாதிரியாகத் தோற்றம் தரும்போது) உண்டாகும் இயல்பான அருவருப்புணர்ச்சி. இந்த உணர்ச்சி ஆணுக்கும் உண்டு