Monday, August 2, 2010

உதிரத்தில் கலந்த உறவே...

என் உயிரே! 
          உயிர்தரும் உதிரமே!

என் இதயமே!
          இதயமேந்தும் துடிப்பே!

என் விழியே!
         விழிகாக்கும் இமையே!

என் குரலே!
          குரல்கொடுக்கும் ஒலியே!

என் வினையே!
          வினைதூண்டும் சிந்தையே!

என் உருவே!
          உருவார்க்கும் கருவே!

என் வாசமே!
          வாசம்உணரும் சுவாசமே!

என் கனவே!
          கனவைத்தாங்கும் கற்பனையே!

என் உணர்வே!
          உணர்வைத்தழுவும் உடலே!


--------------------------------------------------------------------------------------------------------

இவள்..!!



கார்வண்ண முகிலோ!
பால்வண்ண துகிலோ!

கவிபாடும் குயிலோ!
தோகைவிரித்தாடும் மயிலோ!

அணைதாவும் புனலோ!
நதிமேவும் நாணலோ!

இயற்கைசூடும் எழிலோ!
நதிகூடும் கடலோ!

வெம்மைநீக்கும் நிழலோ
வாடைபோக்கும் தனலோ

பிறைதாங்கிய‌ நுதலோ
பூவாங்கிய குழலோ

கார்கால சாரலோ!
இள்வேனிற் தென்றலோ!


தமிழ் எண்களின் தோற்றமும் வளர்ச்சியும்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் வரி வடிவம் எப்படி இருந்தது என்பதை அரசினர் ஆராய்ச்சி துறையின் சுவடிகளில் கண்டால் இன்றைய 1,2,3,4,5,6,7,8,9,0 ஆகியவை தமிழ் எழுத்துக்களே என்பதை அறியலாம்.

இந்த தமிழ் எண்களை தமிழகத்துடன் வர்த்தக தொடர்பு கொண்டிருந்த அராபியர்கள் கொண்டு போயினர்.அவர்களிடமிருந்து மேல் நாட்டினர் கற்று கொண்டனர். ஒரு மாற்றமும் செய்யாமல் அவர்கள் அப்படியே எடுத்தாண்டனர்.அவர்களுக்கு கிடைத்த அன்றைய வடிவமே இன்றைய எண் வடிவம்.

இன்று உலகெங்கும் எழுதப்படும் எண்கள் அராபி எண்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் அராபியர்களுக்கு இந்த எண்களின் வரலாறு பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் இவற்றை இந்திய எண்கள் என்று கூறுகின்றனர்.அரபி எண்கள் என்றும்,இந்திய எண்கள் என்றும் இவ்வாறு தடுமாறி கூறப்படும் எண்கள் பழைய தமிழ் எண்களே என்பது மேலே உள்ள படத்தை நோக்கின் உணரப்படும்

Source : Dinamani.com