Thursday, October 22, 2009

நீர் நீரா ?

சிந்தைகள் சுருங்கி கிணற்று நீராய்
க‌ற்ப‌னை க‌றைபுரண்டு காற்றாட்டு நீராய்
கவிதை ஊற்றெடுத்து சுனை நீராய்
மோகம் முறுக்கெடுத்து மழை நீராய்
காமம் பெருக்கெடுத்து கடல் நீராய்
காயங்கள் கரைந்து கானல் நீராய்
செயல்கள் உருக்குலைந்து ஏரி நீராய் - இப்படி
எல்லையற்ற சிந்தையின் கருவே !
எனை இழுக்கும் சுழி நீரே

No comments: