Wednesday, August 21, 2013

வேரில்லா வாழ்வே !!

இது சித்திரக் கவிகளில் நான்கரைச் சக்கரம் வகையைச் சேர்ந்தது. எனது முதல் முயற்சி...



வேதியன் மகவே வேய்தோள் உருவே
வேல்விழி கனிவே வேரிப்பூ நறவே
வேட்டம் புகவே வேகுதடி நினைவே
வேரில்லா வாழ்வே வேண்டும் விடிவே


வேதியன் மகளே!! மூங்கில்போல் தோள் கொண்டவளே!!
வேல் விழிகளில் கனிவைக் கொண்டவளே!!
வேரிப்பூ நறுமணம் கொண்டவளே !!
உன்னை நினைக்கவே என் மனதில் காதல் வேட்கை புகுகிறது.
அந்த வேட்கையால் உடல் வேகிறது.
வேரில்லாமல் இருக்கும் மரம்போல் உயிரில்லாமல் உள்ளதடி வாழ்க்கை.     இதற்கு விடிவே கிடையாதா!!

2 comments:

விய(க்கும்)ந்த இயற்கை said...

அற்புதமான ஆக்கம்!
இவ்வலைப்பூவின் இதழ்களில் முதல்முறை அமர்ந்த நான்...
இச்சித்திரக்கவித்தேனின் மயக்கத்தில் மனமார்ந்து வாழ்த்துகிறேன்!
கவியூற்றுகளுக்கு வாழ்த்துக்கள்!

ஆதித்ய இளம்பிறையன் said...

வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி விய(க்கும்)ந்த இயற்கை.