உங்கள் அரசியல் பந்தாட்டத்தில் உருட்டி விளையாட தமிழன் தலை தானா கிடைத்தது ??
கங்கை கொண்டு காடாரம் வென்று இமயத்தில் கொடியேற்றிய தமிழன் இன்று வீடின்றி, உண்ண உணவின்றி நடுத்தெருவில் கூடாரமிட்டு நாதியற்று நாடோடியாய் அலைகிறான்.அவனுக்காக குரல் கொடுக்க ஒரு உண்மைத் தமிழன் கிடையாதா ?
விலங்கினங்களை கூட வேட்டையாட வரைமுறை உண்டு. அப்பாவி தமிழனை வெறி கொண்டு வேட்டையாடும் சிங்களனை கேட்க யாரும் கிடையாதா ?? கேட்க வேண்டிய கூட்டமோ சிந்தனையற்று சிதறுண்டு கிடக்கிறது.கேட்ட சிலருக்கோ தேசியம் என்ற பெயரில் சிறைச்சாலை !!
குண்டு வைத்த கொடியவர்கள் கூட சுதந்திரமாக வீதி உலா வரும்பொழுது ஈழத்தமிழன் இறப்பிற்கு கண்டன குரல் எழுப்பியவர்களை கயவர்கள் என்று சிறையில் தள்ளுவதா ?? கன்னடன் அடிக்கும் போதும்,காவிரி நீர் தர மறுத்த போதும் , மீனவனை சுட்டு கொன்ற போதும் எங்கடா போயிற்று உங்களது தேசியம் ?? மாண்டு கொண்டிருக்கும் தமிழன் மண்டையோட்டில் எழுத நினைக்கிறீர்கள் உங்களது இறையாண்மையை ?? தமிழன் என்ற எண்ணம் கூட வேண்டாம் மனிதன் என்ற உணர்வும் கூடவா மறந்து போயிற்று ?? தமிழனின் உதிரத்தை உறிஞ்ச ஏன்டா அலைகிறீர்கள் !!
ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு இனமும் எழுச்சியுற்றதாகவே சரித்திரம் உண்டு..
பொருத்தது போதும் தமிழினமே !! போர்க்கோலம் பூணுவோம் !
புலியை முறத்தால் அடித்த தமிழச்சியின் உதிரமடா நீ !
குழந்தை இறந்தே பிறந்தாலும் வாளால் கீறி புதைக்கும் வீரப்பரம்பரையடா !!
அழிந்து போவதற்கு நாம் ஒன்றும் அடிமைகள் அல்ல ... ஆளப் பிறந்த ஆதிக்க நாயகர்கள் !
எழுச்சி கொண்டு விட்டோம்.. இனி வீழ்ச்சி எமக்கில்லை !!
இந்த வானமும் வையகமும் இனி எம் கால்களுக்கிடையில்....
1 comment:
this reflects my thought....let this thought bring good results...
Post a Comment