Monday, January 3, 2011

கற்பென்பதும் களவேன்பதும் யாதெனில்....

இன்று நமதெனப்படுவது நேற்று நமதில்லை
நேற்று நமதெனப்பட்டது இன்று நமதில்லை

குழப்பமாக உள்ளதா? முன்பு கோவில்களில் தமிழர்களால் ஆடப்பட்ட தேவரடியாள் ஆட்டம் எனபது இன்று பரதநாட்டியம் என்ற பெயரில் ஆடப்பட்டு தமிழர்களுக்கு அன்னியமாகிப்போனது(இதுபோல கர்நாடக இசை, தற்காப்பு கலை இன்னும் நிறைய சொல்லலாம்).அதுபோல நாம் 
கற்பு பற்றி கொண்டிருக்கும்  வரையறையானது நமதில்லை எனபதும் தெளிவு.

"கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
 கொளற்குரி மரபிற் கிழவன், கிழத்தியைக்
 கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” (தொல்காப்பியம் கற்பியல் 140)

 கரண் - உடம்பு
 கொளற்குரி - பெறுவதற்குரிய
 கிழவன் - உரியவன்;தலைவன்   
 கொடைக்குரி - கொடுத்தற்குரிய
 கிழத்தி - உரியவள்;தலைவி

கற்பெனப்படுவது உடம்போடு புணரக், ஆணைப் பெற்றோர் பெண்ணைக் கொள்வதும், பெண்ணைப் பெற்றோர்  பெண்ணைக் கொடுப்பதுமாகும். 

கற்பு என்பதை பின்வருமாறும் கூறுவர்...
கற்பு என்ற சொல்லுக்குக் கற்றதைப் பின்பற்று என்று பொருள். அதாவது பெரியோர்கள் கற்பித்தபடி இல்லறம் நடத்தலே கற்பு எனவும் அவற்றை மீறும்  தலை மக்கள் கற்பிழந்தவர்களாகவும்  கருதப் பெறுவர்.

ஆக கற்பு என்பதற்கும் கன்னித்தன்மை இழத்தல் என்பதற்கும் யாதொரு தொடர்பும்  இல்லை. மேலும் கற்பு என்ற சொல் பெண்ணுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. அது ஆண் பெண் இருவருக்கும் உரித்தான ஒரு சொல்.


களவு:
"காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்
 பாங்கோடு தழாலும் தோழியிற் புணர்வுமென்று
 ஆங்கநால் வகையினும் அடைந்த  சார்போடு
 மறையென மொழிதல் மறையோர் ஆறே"

காமப் புணர்ச்சியும் - மனம் ஒத்த இருவர் தாமே கூடி புணர்வது(பெற்றோர்கள் சம்மதமின்றி).இதை இயற்கைப் புணர்ச்சி எனவும் கூறுவர்.  

இடந்தலைப் படலும் - இயற்கைப் புணர்ச்சி கொண்ட தலைவன் தலைவி மீண்டும் அவ்விடத்தே சென்று கூடுதல் 

பாங்கோடு தழாலும் - (பாங்கன்:தோழன்) தோழனை தலைவியிடம் தூது அனுப்பி அவளை குறியிடத்தே வரச்  சொல்லி கூடுதல்

தோழியிற் புணர்வுமென்று - தலைவியின் தோழி வழியே தூது அனுப்பி அவளை குறியிடத்தே வரச்  சொல்லி கூடுதல்

..ஆக களவை நான்கு வகைபடுத்துகின்றனர்

"உளமலி காதல் களவு எனப்படுவது
 ஒரு நான்கு வேதத்து இருநான்கு மன்றலுள்
 யாழோர் கூட்டத்தின் இயல்பினது என்ப"  (களவியல் நூற்பா -1)

கொடுப்போரும், பெறுவோரும்  இன்றித் தலைமகனும், தலைமகளும் தனி இடத்தில் எதிர்ப்பட்டுத் தாமே கூடி இன்புறுவது. இதுவே யாழோர் கூட்டம் எனப்படும்.

ஞானக்கூத்தன் களவு பற்றி இவ்வாறு கூறுகிறார் 
"நட்புக்குரிய பருவத்தில் இருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது தமக்குள் ஒரு பிணைப்புணர்வு ஏற்பட்டு மீண்டும் சந்திக்க விரும்பிச் சந்தித்துப் பழகுவது 'களவு' எனப்படுகிறது. இந்தச் சந்திப்பும் பழக்கமும் இரண்டு வீட்டார்களுக்கும் தெரியாமலேயே நடப்பதால் வீட்டார் பார்வையில் 'களவு' என்று கருதப்பட்டிருக்கிறது. களவு என்றே பெயரும் பெற்றுள்ளது"

1 comment:

MALAR said...

கற்பென்பதும் களவேன்பதும் யாதெனில்....
By உடையார், September 22, 2011 in பேசாப் பொருள்
1 2 NEXT Page 1 of 2
உடையார்
Advanced Member
உடையார்
கருத்துக்கள உறவுகள்
301
5,396 posts
Gender:Male
Location:Australia
Report post
Posted September 22, 2011
கற்பென்பதும் களவேன்பதும் யாதெனில்....

இன்று நமதெனப்படுவது நேற்று நமதில்லை

நேற்று நமதெனப்பட்டது இன்று நமதில்லை

/
இவ்வலை தளத்தில் பதிவிடப்பட்டுள்ளதே,,, எது அசல்,,ஆசிரியர் யார்,,, தெரியாமல் வினவுகிறேன்,,