Wednesday, January 12, 2011

பொங்கல் வாழ்த்துகள் !!

காடு வளர்த்து கழனி திருத்தி
அணை எடுத்து புனல் தேக்கி
உழவு செய்து களை நீக்கி
பயிர் நடுத்து மானுடத்தின் பசிபோக்கி
கலை வளர்த்து கொடை கொடுத்து
அச்சம் தவிர்த்து வீரம் வார்த்து

இயற்கை துதித்து கால்நடை போற்றி
சுற்றம் அழைத்து சுகித்திருக்கும் ஓரினம் - அது
உலகத்தின் தொன்மையினம் தமிழராம்
அவர்தம் மொழி தமிழாம்
அவர்போற்றும் பண்டிகை பொங்கலாம்!!

பொங்கல் பண்டிகை என்பது திருவிழா என்பதையும் மீறி தமிழர்கள் என்ற இனத்தையும், அந்த இனப் பேசும் தொன்மையான மொழியையும், அவர்களது பண்பாட்டு விழுமியங்களையும் உலகிற்கு உணர்த்தும் நன்நாள்.தமிழர்களின் சுய அடையாளத்தை உணர்த்தும் பொன்நாள்.அந்நாளை மகிழ்வுடன் நினைவு கூறுங்கள்!!

தோழர்கள் அனைவருக்குன் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!

No comments: