Monday, October 29, 2012

கனாக்களோடும் வினாக்களோடும்

மண்ணைத் துறந்து 
மனையை விடுத்து
மனையாளைப் பிரிந்து 
மழலைகளின் மொழிமறந்து
எல்லையற்ற ஆசைகளை சுமந்து
எண்ணற்ற கனாக்களில் கரைந்து  
எதிர்கால வண்ணங்களில் நனைந்து    
பெண்மகவு இரண்டு கொண்டதால்
பின்னாளில் பொருட்ச்செலவு  மிகுமென  
போருள்தேடச் செல்கிறேன் தொலைதூரம் -அங்கு 
துணையின்றி தூக்கம் தழுவுமோ
குழந்தைகாணா   கண்கள்தாம் அயறுமோ 
சுகதுக்கங்கள் பகிர சுற்றம் கிட்டுமோ 
நட்பு பாராட்ட நண்பன்  கிடைப்பானோ 
தனிமை எனை திண்ணுமோ        
வெறுமை எனை துறத்துமோ  
அலுவல்சுமை  எனை அமிழ்த்துமோ     
கனாக்களோடும்  வினாக்களோடும்  வானவீதியில் நான் .

No comments: