Sunday, December 30, 2012

சில கிருக்கல்கள்

நான் யாழ் கருத்துக் களத்தில்(www.yarl.com) எழுதிய கவிதைகள்

நுதலில் உலவும் அளகமே
வேய்கொள் தோளுடன் புலவியோ ??
கன்னக் கதுபபுகளில் தவழ்ந்து
காதுமடலுடன் கலவி  கொள்கிறாய் !!


நுதல் - நெற்றி
அளகம் - முன்னுச்சி மயிர்
வேய்கொள் - மூங்கில் போல் வளைந்த தோள்
புலவி - ஊடல்

அறிவினுயிர் கற்பனையென்றான் ஐன்ஸ்டீன். என்னுயிர் கற்பனைகளும் அவளாலே. அறிவியல் விந்தைகளும் அவளைப்போலவே...



இவள் நெற்றிப்பிறை
     பூமிப்பெண் சூடும் வளர்பிறை
இவள் விழிவீச்சு
      ஒசோனை ஊடுருவும் புறஊதாக்கதிர்வீச்சு
இவள் சிரிப்பலை
       உலகமியங்கும் மின்காந்த கதிரலை
இவள் கண்ணங் கருவிழிகள்
      விண்மீன்களை  விழுங்கும் கருந்துளைகள்
இவள் கவுல்கள்
      வெண்ணிலவின் பால்வண்ணப்  பரப்புகள்
இவள் செவ்விதழ்கள்
      செவ்வாய் கிரகத்தின் மண்வளைவுகள்
இவள் மறைமேடுகள்
      ஆழ்கடல் பனிமுகடுகள்
இவள் உந்திச்சுழி
      பால்மவீதிகளில் சுழலும் சூரியசூறாவளி


கருந்துளைகள் – black holes
சூரியசூறாவளி – solar wind


மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வாறான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.

குழவியுடன் குலவியிருக்கும்போது குளவியோன்று
கடியிலிருந்து கடிதாக வந்து கடித்ததினால்
கோளையில் வைத்த கோலைக்கறியை  புசிக்க முடியாத கோழையானேன்
எந்த தலத்தில் வலிதீர்க்க தழம் கிட்டுமோ
முற்றத்தில் கோளமிட்டு தன் கோலம் திருத்தி
சோலியணிந்து  சோளிதூக்கி சோழியன்வீதி சென்றவளை இன்னும் காணவில்லை
மழைத்துளிதரு  துழிதங்கும் துலிபோல் அசைந்து வருகிறாளோ??


..........
கிளியைக்கண்டுகூட  கிலி கொள்ளும் எனக்கு பொற்கிழி தகுமா ?? 


குழவி - குழந்தை; குலவி - மகிழ்ச்சி; குளவி - ஒருவகை வண்டு;
கடி - அரண்மனை; கடிதாக - விரைவாக; கடி - கவ்வுதல் ;
கோளை - குவளை,பாத்திரம்; கோலை - மிளகு; கோழை - வீரமற்றவன்;
தளம் - மேடை, மாடி வீடு; தலம் - இடம்;  தழம் - தைலம்;
கோளம் - மாவினால் படம் வரைதல்; கோலம் - அழகு;
சோலி - ரவிக்கை; சோழியன்  - சோழி உருட்டுபவன்;சோளி - கூடை;
துளி - மழைத்துளி; துழி - பள்ளம்; துலி - பெண் ஆமை
கிளி - பறவை ; கிலி -அச்சம்; கிழி - பணமுடிப்பு;

No comments: