Sunday, December 30, 2012

மடலேறுதல் / மடலூர்தல்


இணையத்தில் பல வலைத்தளங்களில் மடலேறுதல் பற்றி "பனைமரத்தின் மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து செல்தல்" என்றே குறிப்பிடுகின்றனர். பனைமடலால் செய்யப்பட்ட குதிரையில் ஊர்ந்து செல்ல முடியுமா? இது பொருட் பிழையாகவே தோன்றுகிறது.

தொல்காப்பியத்தில் மடலூர்தல் பற்றி "மடன்மா கூறும் இடனுமா ருண்டே"  
மடன்மா - மடல் மா;மடல் - பனை மடல்; மா - குதிரை ; மடல் தாங்கிச் செல்லும் குதிரை;

ஒத்த பருவமுள்ள ஒருத்தனும் ஒருத்தியும் களவொழுக்கத்தில் காதல் புரிகின்றனர். பெற்றோர் தலைவியின் காதலை கருதாமலும், தலைவி தன காதலை பெற்றோருக்கு தோழி மூலம் உணர்த்தாமல் காலம் தாழ்த்தி வரும்போது, காவல் மிகுதியால் தலைவியை கூட முடியாத பொது தலைவன் மடலூர்தலை நாடுவான்.

தனக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பை ஊரார் அறியும் பொருட்டு, தலைவியின் பெயரையும் உருவத்தையும் பனை ஓலையில் வரைந்து, அதை கையிற் பிடித்துக் கொண்டு குதிரையில் மீதேறி தன காதலை வெளியிட்டவாறு தலைவியின் தெருவிடைச் செல்வான். இதுகண்ட ஊரார் கூடிப் பேசுவர். ஊரார் பேசும் அம்மொழிக்கு அஞ்சி தம் மகளை அவனுக்கே மணமுடிப்பர். இதுவே மடலூர்தல் எனப்படும்.

No comments: