Saturday, July 1, 2017

வெண்பா புனையும் விழியழகே!!


என் கனவு நீ
கற்பனையும் நீ !!
என் நினைவு நீ
நிலவும் நீ !!
என் உணர்வு நீ
உறவும் நீ !!
என் கவிதை  நீ
          சுவாசிக்கும் காற்றும் நீ !!


உறக்கம் துறந்து
உணவு குறைந்து
தன்னிலை பிறழ்ந்து
முன்னிலை மறந்து
ஊன் கரைந்து
தாபம் கொண்டு
தவியாய் தவிக்கிறேன் !!

எண்ணத்தில் மலர்ந்து
இதயத்தில் கலந்து
குருதியில் பரந்து
யாக்கை முழுதும் உன் நினைவலைகள் !!

வார்குழல் பெண்ணழகே
வெண்பா புனையும் விழியழகே!!
வாட்டியது போதும்...
களவு கொண்ட என்னுயிரை
திருப்பி  அனுப்பி வை!!

No comments: