Tuesday, April 27, 2010

கரிகால் பெருவளத்தான்

ஏற‌த்தாழ‌‌ மூவாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கு முன் நிக‌ழ்ந்த‌ உண்மைக் க‌தை இது.
இள‌ஞ்சேட் சென்னி என்ற‌ சோழ‌ ம‌ன்ன‌ருக்கு ஒரு புலிக்குட்டி பிற‌ந்தான்.
ந‌டை ப‌யிலும் இள‌ம் பிராய‌த்திலேயே ப‌கைவ‌ர்க‌ள் அவ‌னை தீயிட்டு கொளுத்த‌ முய‌ன்ற‌ன‌ர். காலில் க‌டுமையான‌ காய‌த்துட‌ன் உயிர் த‌ப்பி காடுக‌ளில் அலைந்து திரிந்தான். இள‌வ‌ர‌சு ப‌ட்ட‌ம் க‌ட்ட‌ வேண்டிய‌ அவ‌னை பிடித்து சிறையில் க‌ட்டி வைத்த‌ன‌ர்.

சிறையில் இருந்த‌ப‌டியே த‌ன் எண்ண‌ங்க‌ளை கூர்தீட்டி, க‌டுமையான் க‌ட்டுக் காவ‌லையும் மீறி சிறையில் இருந்து த‌ப்பினான். த‌ப்பிய‌வுட‌ன் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ ஒரு பெரும் ப‌டை திர‌ட்டி த‌ஞ்சைக்கு கிழ‌க்கே 20 மைல் தொலைவில் உள்ள‌ வெண்ணி என்ற‌ இட‌த்தில் சேர‌ ம‌ன்ன‌ன் பெருஞ்சேர‌லாத‌ன் த‌லைமையில் 11 சிற்ற‌ர‌ச‌ர்க‌ள் கொண்ட‌ ப‌டையை எதிர்த்து போர் புரிந்தான். போரில் பாண்டிய‌ர், ஒளிய‌ர்க‌ள், வேளிர்க‌ள், அறுவ‌ள‌ர், வ‌ட‌வ‌ர், மேற்க‌த்திய‌ர் உட்ப‌ட‌ 11 அர‌ச‌ர்க‌ளையும் தோற்க‌டித்து பெருவெற்றி கொண்ட‌ அந்த‌ புலிக்குட்டி வேறு யாரும‌ல்ல‌ ச‌ங்க‌ இல‌க்கிய‌ங்க‌ளால் போற்றப‌டுப‌வ‌னும், க‌ல்லையும் க‌ளிம‌ண்ணையுமே கொண்டு மூவாயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ நிலைத்து நிற்க‌கூடிய‌ வ‌லிமையான‌ க‌ல்ல‌ணையை க‌ட்டிய‌ க‌ரிகாலன் தான்.

சோத‌னைக‌ள் அடுக்க‌டுக்காக‌ ஆட்கொண்ட‌போதும் அத‌னை த‌க‌ர்த்து வெற்றி
கொண்ட‌ க‌ரிகால‌னை 3000 ஆண்டுக‌ள் க‌ழித்து நினைவு கொள்கிறோம். த‌ப்பிப்ப‌து க‌டின‌ம் என்று சிறையிலே இருந்திருந்தால் க‌ல்ல‌ணை ஏது?
காவிய‌ங்க‌ள் போற்றும் க‌தாநாய‌க‌ன் ஏது?

No comments: