Tuesday, July 15, 2008

தீண்டல் !

கார்மேகத்தின் மின்னலாய் - உன்  
கண்கள் தீண்டும் இன்பம் !  

தென்றலினும் மென்மையாய் - உன்
சேலை தீண்டும் இன்பம் !  

திங்களின் குளிர்ச்சியாய் - உன்  
தேகம் தீண்டும் இன்பம் !  

கார்காலத்தின் இரவுகளாய் - உன்  
கைகள் தீண்டும் இன்பம் !  

மார்கழி மாத பனி மூட்டமாய் - உன்  
மூச்சு தீண்டும் இன்பம் !  

உன் ஒவ்வொரு அசைவுக்கும் என்னுள் ஓராயிரம் உணர்ச்சி பிளம்புகள் !  

தனிமையின் துயரங்களோடும்  
வாழ்கையின் வெருமைகலோடும் - உறவாடும் எனை  

ஒரே பார்வையில்  
உதிரத்தை உறைய வைப்பதும் எரிமலையாய் உருக வைப்பதும்  
இறந்து போகும் எனை மறுபடியும் உயிர்பிக்க முயல்வது ஏனோ ?

No comments: