Thursday, August 21, 2008

இட ஒதுக்கீடு தேவையா ? ?

இட ஒதுக்கீடு ஏன் ?

இரண்டாயிரம் ஆண்டு காலமாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினராக இந்து மதத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன. எனவே இந்த பன்னெடுங்கால கொடுமைக்கு ஓர் இடைக்காலத்தீர்வாக இவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம் சில உரிமைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதை மேலோட்டமாக பார்த்தால் இரண்டாயிரம் ஆண்டு காலமாக நடந்த கொடுமைகளின் ஆழம் தெரியாது .உலகில் வேறு எங்குமே நடந்திடாத கொடுமைகள் மதத்தின் பெயரால் இங்குதான் நடத்தப்பட்டு வந்தது.நிற்க உரிமை இல்லை , நடக்க உரிமை இல்லை,கல்வி கற்க உரிமை இல்லை, பெண்கள் ரவிக்கை அணிய உரிமை இல்லை.,,, இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.மொத்தத்தில் மனிதன் இங்கு மனிதனாக நடத்தப்படவில்லை.மலம் தின்னும் மிருகத்தை விட கேவலமாக நடத்தப்பட்டான்.

இட ஒதுக்கீடு தேவையா ? ?

இடஒதுக்கீட்டுக் கொள்கையை இந்திய அரசு கடைப்பிடிக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.உயர்ந்த சாதி காரர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அந்த 5% மக்களும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து இருப்பார்கள்.ஐரோப்பிய வரலாற்றை எடுத்து பார்த்தால் எல்லா விதமான சமூக மாற்றங்களும் ரத்தத்தின் மேலும், எலும்புக்கூடுகளின் மேலும்தான் நடந்துள்ளது என்று தெரியும். ஆனால் இந்தியாவில் அது நடக்க வில்லை.அப்படி நடந்து இருந்தால் உரிமைகளை கேட்டு பெற்று இருக்க மாட்டார்கள் அவர்களே எடுத்து இருப்பார்கள்.இன்னும் சாக்கடைகளை தாழ்ந்த சாதி காரனே அள்ளி கொண்டு இருக்க மாட்டன். எந்த உயர்ந்த சாதி காரணவது சாக்கடை அள்ளி பார்த்தது உண்டா ??

இடஒதுக்கீது என்பது சமூகத்தில் பின்தள்ளப்பட்டவர்களின் பொருளாதார வளத்தைப் பெருக்குவது என்பது மட்டுமல்ல; அது ஒரு சாதியச் சமூகத்தின் சமூக நீதியாகக் கருதத்தக்கது. சாதியச் சமூகத்தில் வறுமை உயர்சாதிக்காரர்களிடம் வெளிப்படுகிறது என்றால், அதற்குக் காரணம் பொருளாதாரப் பற்றாக்குறை மட்டுமே. ஆனால், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரின் ஏழ்மைக்குக் காரணம் சாதியச் சமூகம் கட்டமைத்த சமுதாய ஏற்றத்தாழ்வாகும்.இட ஒதுக்கீட்டின் நோக்கம் ஜாதிகளுக்கு இடையேயான சமன்பாட்டைக் கொண்டுவருவதுதானே ஒழிய, பொருளாதார நிலையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்வதல்ல.

எதன் பெயரால் ஒடுக்கப்பட்டோமோ அதன் பெயரால் எழுச்சி பெறுவதே சரியான தீர்வு இன்றைய தேதியிலும் வெகு குறைந்த என்னிக்கையிலிருந்தாலும் அதிகாரம் யார் கையில் இருக்கிறது?. மீடியா முதல் அரசு உயர் பொறுப்புகள் என அனைத்தும் யார் ஆக்கிரமித்து இருக்கிறார்கள்? போராடி பெற்ற இட ஒதுக்கீட்டையும் நிறைவேற்றாமல் இருப்பது யார்? மருத்துவக் கல்லூரிகளில் நுழைவுத்தேர்வுக்கு சமஸ்கிருதம் ஏன் கட்டாயமாக்கப்பட்டது?  

ஒரே மாதிரி 50 மார்க் மட்டுமே எடுக்கும் 4 வித சமூகங்களும் ஒன்றாகவே கருத்தப்பட வேண்டுமென்பது ஏற்புடையதா ? பள்ளிசெல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வேலைசெய்தால் தான் உணவு என்று இருப்பவன் எடுக்கும் 50 மதிப்பெண்ணும் படிப்பைத் தவிர வேறெதும் செய்யத் தேவையில்லாதவர்கள் எடுக்கும் 50 மதிப்பெண்களும் ஒன்றா ?  

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டுமென்பது நல்ல சிந்தனைதான்... அதற்கு முன்பு இதுவரை எல்லோரும் எல்லாமும் பெற்று சமநிலையில் இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்...போட்டிக்கு அவர்களை தயார்படுத்தவேண்டும். பலமில்லாதவர்கள் தங்களுடன் போட்டி போடவேண்டும் மென்பது சுயநலப் பார்வையும் தன்சமூகம் சேர்ந்த பார்வையே அன்றி வேறுபாடுகளை களையவேண்டும் ஒரு குடும்பத்தில் 500 மிலி பால் வாங்குகிறார்கள். ஒரு குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது. ஒரு குழந்தை நோய் வாய்பட்டிருக்கிறது என்றால் ஆரோக்கியமான குழந்தைக்கு 200 மிலி, நோயாளிக்கு 300ம் வழங்குவது சரியா ??இருவருக்கும் 250 மிலி வழங்குவது சரியா??
நீங்கள் இருவருக்கும் 250 மிலி வழங்கச்சொல்கிறீர்கள். ஏன் சாமி இப்படி கொடுமை செய்கிறீர்கள் வீரியமுள்ள விதை பாலைவனத்தில் விதைக்கப்பட்டால் அதற்கு ஆற்றோரம் விதைக்கப்பட்ட விதையை விட அதிகம் தண்ணீர் அளிக்கப்பட வேண்டுமல்லவா.

மண்டல்குழுவை அமல்செய்து பாராளுமன்றத்தில் பிரதமர் வி.பி.சிங் ஆற்றிய உரை
‘‘தகுதி, தரம் என்பது என்ன? நான்கு அறைக்குள் படித்து மதிப்பெண் வாங்குவதுதானா தரம்? அதைவிட நாட்டின் நிலையறிதல்; தன் மக்களின் நிலையறிய அவர்களோடு கலத்தல்; அவர்களின் வாழ்நிலையை, தேவையைப் புரிதல்; இவைதான் தகுதி, தரத்துக்கான அடையாளம். இவற்றில் முன்னேறிய உயர்சாதிகளைவிடப் பிற்படுத்தப்பட்ட சாதியினர் சிறப்பான அறிவைப் பெற்றிருக்கின்றனர்’’ என்றார். மேலும், உயர்சாதிக்காரர்களே தங்களைத் தகுதியானவர்கள் எனக் கட்டமைத்துக்கொண்டு ஆண்டுகொண்டிருக்கும் பீஹார் மாநிலத்தின் நிர்வாகச் சீர்கேடுகளைச் சுட்டிக் காட்டினார். ‘‘பொதுத்துறை நிர்வாகம் அனைத்தையும் ‘தகுதி’யுடைய உயர் வகுப்பினர்தான் நிர்வகித்துக் கொண்டு வந்துள்ளனர். ஆனால் ஆண்டொன்றுக்கு ரூ.2000 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது ஏன்? இதற்கு மாறாகத் தமிழ்நாடு போன்ற பிற மாநிலங்களில், நீண்ட நாட்களாகவே பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், அங்கே நிர்வாகமும் சமூக முன்னேற்றமும் பீஹாரை விடச் சிறந்து விளங்குகின்றன.’’


சில ஆயிரம் வருடங்களாக பிறப்பின் காரணமாக ஒதுக்கப்பட்ட மக்களின் நேர்மையான முன்னேற்றத்திற்கு, அவர்களுக்குச் சில நூற்றாண்டுகளுக்காவது இட ஒதுக்கீடுகள் கொடுக்கப்பட வேண்டும்.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலவிய வருணாசிரம ஒடுக்கு முறைகளும் மனுதர்ம பாசிசமும் அதன் விளைவாய்த் தோற்றுவிக்கப்பட்ட சமூமப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் தீர இட ஒதுக்கீடு என்பது சரியான தீர்வு தான்.

ஆண்டாண்டு காலமாய் நம் சமூகத்தைப் பீடித்துள்ள சாதி என்னும் வியாதி ஒழிந்து, பிறப்பினால் எந்த மனிதனும் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை என்ற சமத்துவ சமுதாயம் ஏற்படும் வரையில் இட ஒதுக்கீடு அவசியமே ..


No comments: