Saturday, August 23, 2008

குசேலன் : பெயர்க்காரணம்



திருமாலின் அவதராங்களில் ஒன்றான அவதாரம் தான் கிருஷ்ண (கண்ணன் ) அவதாரம்.

ஆயர்பாடியில் கண்ணன் வளர்ந்தபோது அவனது இளமைக்கால தோழன் தான் குசேலன் . பின்னர் கண்ணன் துவாரகையின் அரசனான பிறகு குசேலன் தனது வறுமை நீங்க கண்ணனிடம் உதவி கோருகிறான்.கண்ணனின் வேண்டு கோளுக்கிணங்க மகாலட்சுமி குசேலனைக் கடைக்கண் கொண்டு பார்த்ததால் குசேலன் தனது வறுமை நீங்கி செல்வத்துக்கு அதிபதியான குபேரனானான் என்ற ஒரு புராண கதை உண்டு .

(துவாரகை : இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள ஒரு நகரமாகும்)

இராவணனின் தமையன் குபேரன் என்ற கதையும் உண்டு. குபேரன் அவனது தந்தையான மாலியவந்தனிடமிருந்து இலங்கையைக் பறித்துக்கொண்டான்.மாலியவந்தன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து இராவணனைப் பெற்றான். இராவணன் இலங்கையிலிருந்து குபேரனைத் துரத்தினான் என்கின்றன நம் தொன்மங்கள்.


குசேலனை பற்றி தேடி கொண்டிருக்கும்போது துவாரகை பற்றி சில சுவாரஸ்யமான தவல்கள் கிடைத்தன ..
மகாபாரதம் குமரிக் கண்டத்தில் நடந்த நிகழ்வின் தொன்ம வடிவம். பாம்பைத் தோற்றக்குறியாகக் கொண்ட நூற்றுவர்க்கும் அதாவது நாகர்களுக்கும் இயற்கையில் அதன் எதிரியாகிய பருந்தைக் குலக்குறியாகக் கொண்ட கண்ணணுக்கும் அதாவது யாதவர்களுக்கும் நடந்த போர். அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் எரிக் வான் டெனிக்கன் என்ற அறிஞர். எரித்து அழிக்கப் புறப்பட்ட கண்ணணும் அருச்சுனனும் பயன்படுத்திய படைக்கலன் (அம்பு?) ஏற்படுத்திய விளைவுகளை நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுக்குண்டின் விளைவுகளோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார் அவர். அசுவத்தாமன் வீசிய ஓர் ஆயுதம் கருவிலிருந்த குழந்தைகள் அனைத்தையும் அழித்ததாம்.

போர் முடிந்து அனைவரும் மடிந்து இறுதியில் கண்ணன் உயிரைக் கால் கட்டைவிரலில் தேக்கி அறிதுயிலில் இருந்த போது அசைந்த விரலைக் குருவி எனக் கருதி அம்பெய்து கண்ணனின் சாவுக்குக் காரணமான வேடனின் பெயர் சேரன். அதுவரை நாகமாக இருந்த சேரனின் கொடி இதிலிருந்து தான் வில்லாயிற்றோ? அவர் பெயர் முரிஞ்சியூர் முடி நாகராயர் .

No comments: